ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 88-ஆவது பிறந்த நாள் இன்று, (1-10-16) ! இதனை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளில் சிலர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் சிவாஜியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவாஜியின் வீடான 'அன்னை இல்ல'த்திற்கு சென்று அங்குள்ள அவரது புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, பிரகாஷ், உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சிக்கும், சிவாஜியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கும் நடிகர் சங்கத்தின் தலைவரான நாசரோ... செயலாளர் விஷாலோ... பொருளாளர் கார்த்தியோ செல்லவில்லை. மாறாக, நடிகர் சங்கத்தின் நிர்வாகப்பொறுப்பில் உள்ளவர்களை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டனர்.
சிவாஜியின் பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செய்வதை முக்கிய வேலையாக இவர்கள் நினைக்கவில்லையா? அல்லது வெளியூர் சென்றுவிட்டனாரா? நடிகர் சங்கத்தை உருவாக முக்கிய காரணமாக இருந்த சிவாஜிக்கு இன்றைய நடிகர் சங்க நிர்வாகிகள் கொடுக்கும் மரியாதை இதுதானா?