ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருச்சி தியேட்டரில், கபாலி பட விளம்பர ராட்சத பலுான் வெடித்ததில் காயமடைந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி, தயாரிப்பாளர் தாணு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட, ஐந்து பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம், சில மாதங்களுக்கு முன், திருச்சி ரம்பா தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்காக, ராட்சத விளம்பர பலுான், தியேட்டர் அருகே பறக்க விடப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து, பலுானை அவிழ்த்தபோது, அது எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில், நால்வர் காயமடைந்தனர்; அனைவரும் தனியார் மருத்துவமனையில், சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை, வாடகைக்கு பலுான் அமைத்தவரே, ஏற்க வேண்டும் என போலீசார் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து வாடகைக்கு பலுான் அமைத்தவர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ரஜினிகாந்த், ரம்பா தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கர்ணன் ஆகியோருக்கு, நஷ்டஈடு கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: பலுான் வெடித்ததற்கு, ரசிகர்களின் ஆர்வக் கோளாறே காரணம். ஆகையால், படத்தால், லாபமடையும் தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்டவர்கள் தான், இழப்பீடு வழங்க வேண்டும். அந்த வகையில், காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு, 10 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், ஐந்து பேர் மீதும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.