ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படம் இன்று ஆரம்பமானது. இப்படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றது. இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. விஷால் 'கத்திச் சண்டை' படத்தை முடித்தவுடன் 'துப்பறிவாளன்' படத்தை ஆரம்பிக்க முடிவு செய்திருந்தார். பத்து நாட்களுக்கு முன்பாக 'கத்திச் சண்டை' படப்பிடிப்பும் முடிவடைந்தது. அடுத்த மாதம் தீபாவளிக்கு 'கத்திச் சண்டை' படம் வெளியாக உள்ளது.
மிஷ்கின் கடைசியாக 'பிசாசு' படத்தை இயக்கினார். அந்தப் படம் சுமாராக ஓடியது. சுமார் இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஷாலை வைத்து இந்தப் படத்தை ஆரம்பிக்கிறார். வித்தியாசமான கூட்டணி, விறுவிறுப்பான படத்தைத் தரட்டும்.
“துப்பறிவாளன், மிஷ்கின் சார் இயக்கத்தில் என்னுடைய அடுத்த சொந்தத் தயாரிப்பை ஆரம்பித்துவிட்டேன். உற்சாகமான ஒரு விஷயம், உங்கள் அனைவரின் வாழ்த்துகள் வேண்டும்,” என விஷால் கூறியுள்ளார்.
இப்படத்திற்காக விஷால் உட்பட படத்தில் நடிக்கும் அனைவரும் கடந்த பத்து நாட்களாகவே நடிப்புப் பயிற்சியையும் எடுத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.