ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'இருமுகன்' படத்தின் வசூல் 100 கோடியைத் தொடப் போவதாக நேற்றிலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. இந்தப்படம் செப்டம்பர் 8ம் தேதி வெளியானது. படம் பற்றி பல எதிர் விமர்சனங்களும் வந்தாலும், போட்டிக்கு வேறு எந்தப் படமும் இல்லாத காரணத்தாலும், கமர்ஷியலாக படம் ரசிகர்களைக் கவர்ந்ததாலும் படம் வெளியான சில நாட்களிலேயே படம் வெற்றி என தயாரிப்பாளர், வினியோகஸ்தர் இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவித்தனர். அது மட்டுமல்லாமல் அன்று வரை 60 கோடிக்கு மேல் வசூலானது என்ற தகவலையும் அறிவித்தனர்.
தற்போது படம் இரண்டு வாரங்களைத் தொட உள்ள நிலையில் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலாகியுள்ளதாம். நாளை 'தொடரி' படமும், நாளை மறுநாள் 'ஆண்டவன் கட்டளை' படமும் வெளியாக உள்ளதால் 'இருமுகன்' படத்திற்கு நாளை முதல் தியேட்டர்கள் குறைய வாய்ப்புண்டு. இருந்தாலும் மூன்றாவது வாரத்திலும் பல தியேட்டர்களில் படம் தொடர வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதனால், 100 கோடி ரூபாய் வசூலை 'இருமுகன்' எட்டிப் பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.
முதல் நான்கு நாட்கள் வசூலைச் சொன்னவர்கள் 100 கோடி வசூலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா ?.