Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபூவர்வ நோயால் போராடும் சிறுமியின் கனவை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ்

15 செப், 2016 - 08:20 IST
எழுத்தின் அளவு:
Lawrence-fullfill-13year-old-girls-dream

மரணத்திற்கு முந்தி எப்படியும் நடிகர் ராகவா லாரன்சை சந்திக்கவேண்டும் என்ற கனவுடன், நாட்டிய தேவதையாக வலம் வரும் கடலுார் ஏஞ்சலின் செரிலின் நிஜக்கதையை தினமலர் இணையத்தில் படித்த நடிகர் ராகவா லாரன்ஸ், உடனடியாக ஏஞ்சலினை சென்னைக்கு வரவழைத்து பேசி சந்தோஷப்படுத்தியதுடன் தன்னுடன் விரைவில் திரையில் தோன்றி நடனமாடலாம் என்றும் சொல்லியிருக்கிறார்.


கடலுார் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ்-ஜீவா தம்பதியினரின் ஒரே மகள்.திருமணமாகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து பிறந்தவர் என்பதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தனர். உங்கள் குழந்தைக்கு உலகிலேயே மிக அபூர்வமாக வெகு சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய சிஎச்ஏ(Congenital adrenal hyperplasia (CAH) is a group of rare inherited autosomal recessive disorders characterized by a deficiency of one of the enzymes needed to make specific hormones. CAH effects the adrenal glands located at the top of each kidney) எனும் நாளம் தொடர்பான நோய் உள்ளது. மருந்து மாத்திரைகள் மரணத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமே தவிர இந்த நோய்க்கு தீர்வை தராது, என்று சொல்லி குழந்தை பிறந்த சந்தோஷத்திற்கு மருத்துவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.


தனியார் பள்ளி ஆசிரியையான ஜீவா வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு மகளை வாழவைக்கும் வழியைக் கண்டறிவதில் இறங்கினார். அசராமல் மருத்துவம் பார்த்துக் கொண்டே இருக்கிறார். உணவைவிட மருந்து மாத்திரைகள்தான் அதிகம், அதே போல எல்லா செலவுகளையும் விட மருத்துவசெலவுகளும் அதிகம். தான் வாழும் நாள் பற்றிய விவரம் தெரிந்தும் ஏஞ்சலின் கலங்கவில்லை, வாழும் வரை தானும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தார்.அதற்காக எடுத்துக்கொண்டதுதான் நடனம்.


நாட்டிய தேவதை என்று சொல்லும் விதத்தில் பரதநாட்டியம்,கிராமிய நடனம்,மேற்கத்திய நடனம்,பொய்க்கால் குதிரை,ஒயிலாட்டம் என்று அனைத்து வகை நடனங்களும் ஆடுவதில் வல்லவர். ஒரு பக்கம் நடனத்திறமை அதிகரித்துக்கொண்டே இருப்பது போல நோயின் தீவிரமும் கூடிக்கொண்டே போகிறது அடிக்கடி சுருண்டு விழுந்துவிடுவார் ஒவ்வொரு முறை சுருண்டு விழும்போதும் இது மயக்கமா? மரணமா? என பெற்றோர் துடிதுடித்து போவர்.


ஏஞ்சலின் செரிலுக்கு ஒரே ஒரு ஆசைதான் அது நடிகர், நடன இயக்குனர் மற்றும் அறக்கட்டளை அமைத்து பல்வேறு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாவலராக இருந்து வருபரான ராகவா லாரன்சை சந்திக்க வேண்டும், முடிந்தால் அவருடன் இணைந்து நடனமாடவேண்டும் என்பதுதாகும். இவரைப்பற்றியும் இவரது ஆசைக்கனவு பற்றியும் கடந்த 07/09/16 ந்தேதி தினமலர் இணையத்தில் நிஜக்கதை பகுதியில் எழுதியிருந்தோம்.


இதை தெரிந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் மும்முரத்தில் இருந்தபோதும் முதலில் ஏஞ்சலினை வரச்சொல்லுங்கள் பார்த்துவிடுகிறேன் என்று சொல்லி வரச்சொல்லி சென்னை அசோக்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து பார்த்தார். இவர்களது சந்திப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னோரு பக்கம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏஞ்சலினின் பிரச்னையைப் பற்றி மிக அக்கறையாக ஏஞ்சலினிடமும் அவரது தாயார் ஜீவாவிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.


வெளிநாடு போய்வந்த பிறகு முறைப்படி ஒரு அரைமணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருவரும் நடனமாடலாம் அந்த நடனத்தை உலகம் முழுவதும் பார்க்கும்படி செய்யலாம், அது மட்டுமின்றி எனது அடுத்த படத்தில் உன் நடனத்தை மையப்படுத்தி ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறேன் என்றார். ஏஞ்சலினுக்கு அளவில்லாத மகிழ்ச்சி தனது கால் சலங்கையை அவரிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விடைபெற்றார்.


இந்த கணம் இறந்தாலும் மகிழ்ச்சியே என்றவரிடம், தப்பும்மா இந்த கணம் முதல் உன் வாழ்க்கை இன்னும் பிரகாசமாகியிருக்கிறது, மேலும் உற்சாகமாயிருக்கிறது நீ வாழப்பிறந்தவள் நடனத்தால் ஆளப்பிறந்தவள் என்று வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in