ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கருப்பையா முருகன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் யானை மேல குதிரை சவாரி. நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, முத்துராமன் உள்பட பலர் நடித்த இந்த படத்தில் நாயகியாக அர்ச்சனா சிங் நடித்திருந்தார். இவரைச்சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருந்தது. அந்த படத்தை அடுத்து வெருனி -என்ற படத்தில் சிங்கிள் ஹீரோயினாக நடித்து வரும் அர்ச்சனா சிங், தமிழ் சினிமாவில் அஜித்குமார்தான் எனது பேவரிட் ஹீரோ என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், அஜித் நடித்த படங்களில் வேதாளம் எனக்கு மிக வும் பிடித்த படம். அந்த படத்தைப் பார்த்ததில் இருந்து அஜித்தின் தீவிரமான ரசிகையாகி விட்டேன். அதோடு, அவருடன் டூயட் பாட வேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகமாகி விட்டது. தற்போது தமிழில் வளர்ந்து கொண்டிருக் கும் நான், எதிர்காலத்தில் கண்டிப்பாக அஜித்துடன் டூயட் பாடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், அஜித் தவிர விஜய், சூர்யாவும் எனக்கு பிடித்த மான நடிகர்கள்தான். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான ஸ்பெசாலிட்டி உள்ளது. இவர்கள் எல்லோருமே திறமையான நடிகர்கள்தான்.
மேலும், சென்னைக்கு அவ்வப்போது வந்து செல்வதால் இப்போதுதான் அதிகமான தமிழ்ப்படங்களை பார்க்கிறேன். இங்கு நல்ல தரமான படங்கள் நிறைய வருகிறது. காரணம் கோலிவுட்டில் நிறைய திறமையான டைரக்டர்கள் இருக்கிறார்கள். அதனால் நல்ல டைரக்டர்களின் படங்களில் நடித்து என்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யானை மேல குதிரை சவாரி படம் வெளியானபோது பல டைரக்டர்கள் என்னிடம் கதை சொன்னார்கள். அதில், வெருளி, மெளனிகா, கன்னி சாமி ஆகிய தமிழ்ப்படங்களில் இப்போது நடித்து வருகிறேன். கன்னடத்தில் மாமு டீ அங்காடி படத்தைத் தொடர்ந்து டியூப் லைட் என்ற படத்திலும், தெலுங்கில் பொட்லகிதா என்ற படத்திலும் நடித்து வருகிறேன் என்று கூறும் அர்ச்சனா சிங், தற்போதைய சினிமாவில் நடிகைகளிடம் பர்பாமென்ஸ் மட்டுமின்றி கிளாமரையும் எதிர்பார்க்கிறார்கள். அதனால் கதைக்கு தேவைப்படும்போது நயன்தாரா, திரிஷா போன்று கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார்.