விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அரிமாநம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன். முதன்முறையாக விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளில் தயாரிப்பளார் ஷிபு தமீன்ஸ் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவரது சொந்த ஊர் கேரளா என்பதால், அங்கே புரமோஷன் நிகழ்ச்சிய சமீபத்தில் நடத்தினார். இதில் விக்ரம் சந்தோஷமாக கலந்துகொள்ள, வழக்கம்போல நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்.
விழா நடக்கும் திறந்தவெளி மைதானத்திற்கே விக்ரமை தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். அது மட்டுமல்ல விக்ரம் ஹெலிகாப்டரை விட்டு இறங்கி நடந்து வரும்போது செண்டமேளம் கொட்ட கேரளா பெண்கள் பரதநாட்டியத்துடன் அவரை வரவேற்க சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றார் விக்ரம்.. தான் தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல், பட வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தது மலையாள திரையுலகம் தான். அதனால் விக்ரமிற்கு கேரளாவின் மீது எப்போதுமே தனி பாசம் உண்டு. இந்த முறை ஷிபு தமீன்ஸ் காட்டிய தடபுடல் வரவேற்பு அவரை இன்னும் கேரளாவுடன் நெருக்கப்படுத்தியுள்ளது.