ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படமான பாகுபலி. அதை யடுத்து மீண்டும் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து பாகுபலி-2 படவேலைகள் கடந்த பல மாதங்களாக ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டு வந்தது. தற்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டார் ராஜமவுலி. இதற்கடுத்து அனிமேஷன் வேலைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகுபலி-2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால், எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று கவனமாக செயல்படுகிறாராம் ராஜமவுலி. அதன்காரணமாக, அப்படத்திற்கு முதலில் ஒரேயொரு க்ளைமாக்ஸை மட்டுமே ரெடி பண்ணி வைத்திருந்தவர், இப்போது நான்கு விதமான க்ளைமாக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணி அதிலிருந்து இரண்டை தேர்வு செய்து அவற்றை படமாக்கி வருகிறாராம்.
அந்த இரண்டு க்ளைமாக்ஸையும் படமாக்கி, அதில் எது சிறப்பாக உள்ளதோ அதை படத்தில் இணைத்து வெளியிடப்போகிறாராம். ஒருவேளை படம் வெளியான பிறகு அந்த க்ளைமாக்ஸ்க்கு ரசிகர்கள்தரப்பில் இருந்து ஏதேனும் அதிருப்தி நிலவினால். கைவசம் இருக்கும் இன்னொரு க்ளைமாக்ஸை படத்தில் இணைக்கும் யோசனையும் உள்ளதாம். இப்படி இரண்டுவிதமான க்ளைமாக்ஸை எடுப்பதால் பாகுபலி-2 படத்தின் பட்ஜெட் கணிசமான அளவு உயர்ந்து விட்டதாம்.