ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கி வரும் 'எஸ் 3' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடக்கவேயில்லை. பெரும்பாலும் ஐதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தான் நடந்தது. சென்னையில் நடைபெற்றதாக எந்தத் தகவலும் இல்லை. 'எஸ் 3' படத்தில் ஆந்திர போலீஸ் அதிகாரியாகவும் சூர்யா நடிப்பதால் தான் தெலுங்கு மக்களுக்குப் பிடிக்கும் விதத்தில் அங்கேயே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவின் தற்போதைய டிரென்ட்படி மலேசியாவிலும் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அனேகமாக, அந்தக் காட்சிகளில் சூர்யா பிரமோஷன் ஆகி சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கவே வாய்ப்புகள் அதிகம். முதல் இரண்டு பாகங்களில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யாவை மூன்றாம் பாகத்தில் பதவி உயர்வு கொடுத்தால்தானே அவருடைய ரசிகர்களுக்கும் பிடிக்கும். அதோடு, ஆந்திர போலீசுக்கும், தமிழ்நாடு போலீசுக்கும் சீருடையில் சிறிய மாற்றங்கள் இருக்கும். எனவே, ஒரு டப்பிங் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கவனமாகக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.
இந்தப் படம் மூலம் தமிழை விட தெலுங்கில் அதிகமாகக் காலூன்ற வேண்டும் என்று சூர்யா எதிர்பார்க்கிறாராம்.