சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் ஆவார். கமலுக்கு கிடைத்த கவுரவத்தையொட்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‛‛அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியே கிடைத்த தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியே வழங்கலாம். அவர் பேசும்போது, கே பாலசந்தர் அவர்கள், "அவன் எட்டாவது கூட முடிக்கல ஆனால் அவனுடைய ஆங்கிலத்தை புரிஞ்சுக்க எனக்கே டிக்ஸனரி தேவைபடுது" என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்தனை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன'' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.