திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவை பற்றி வீடியோ ஒன்று வெளியாகி பலரின் பாராட்டுதலுக்கு உள்ளாகி உள்ளது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது...? ஹன்சிகா, சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு போர்வை, உடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவரே நேரடியாக சென்று வழங்கியிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.