ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சந்தானம் நடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ராம்பாலா இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பேப்பர் பிளைட் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 14வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
“இயக்குனர் ராம்பாலா எங்கள் நிறுவனத்துக்கு இயக்கிய 'ஆவி பறக்க ஒரு கதை' என்ற படத்தின் கதையைத்தான் 'தில்லுக்கு' துட்டு என்ற பெயரில் இயக்கி உள்ளார். அந்த படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும்” என்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சந்தானம் மற்றும் ராம்பாலா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 'தில்லுக்கு துட்டு' கதையும் தாக்கல் செய்யப்பட்டது. 'ஆவி பறக்க ஒரு கதை' படத்தின் கதையும் 'தில்லுக்கு துட்டு' படத்தின் கதையையும் ஆய்வு செய்த நீதிமன்றம் இரண்டும் ஒரே கதை அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. “ராம்பாலா எடுத்துள்ள கதைக்கும் மனுதாரர் தாக்கல் செய்துள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே 'தில்லுக்கு துட்டு' படத்தை வெளியிட தடையில்லை” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளது.