ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதிர், ஸ்வப்னா மேனன், நடிக்கும் படம் 'ஒன்பதிலிருந்து பத்துவரை'. விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கி உள்ளார், சி.மணிகண்டன் தயாரித்துள்ளார், எம்.கார்த்திக் இசை அமைத்துள்ளார். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஜூலை 1ந் தேதி வெளிவருகிறது.
“இது ஒரு ரோட் திரில்லர் கதை. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் ஹீரோயின் ஒரு அவசர வேலையாக வெளியூர் செல்ல வேண்டும். அவள் புக் செய்யும் கால் டாக்சி டிரைவர் கதிர். இருவரும் காரில் பயணம் செய்யும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு வருகிறது. பின்பு கதிர், ஸ்வப்னாவின் ரசிகர் என்று தெரிந்து சமாதானமாகிறார்.
இந்த நிலையில் கதிரை போலீஸ் ஒரு கொலை வழக்கிற்காக தீவிரமாக தேடுகிறது. கதிர் கொலை செய்தது யாரை என்பதற்கும், ஹீரோயின் காரை எடுத்துக்கொண்டு ஒரு ஊருக்கு அவசரமா செல்வற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதுதான் கதை. காலை 9 மணிமுதல் இரவு 10 மணி வரை நடக்கிற கதை. பெரும்பலான காட்சிகள் கார் பயணத்திலேயே நடக்கிறது. என்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார்.