ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி அபிநயாவை 'நாடோடிகள்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இயற்கையிலேயே காதுகேளாத வாய்பேச முடியாத அபிநயா இன்று தென்னிந்திய மொழிகளில் குறிப்பிடத்தக்க நடிகையாக விளங்குகிறார். இந்தி மற்றும் ஆங்கிலப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமுத்திரக்கனி தற்போது 'அப்பா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அப்பா எப்படிபட்ட இடத்தில் இருக்கிறர் என்கிற கதை. இதற்காக சமுத்திரகனி முக்கியமான நடிகர், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்களிடம் தங்கள் அப்பா குறித்து பேச வைத்து அதனை வீடியோவாக தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் அபிநயாவிடமும் அவர் தந்தை பற்றி கேட்டு அதனை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
வாய்பேச முடியாத அபிநயா தன் தந்தை மீது வைத்திருக்கும் பாசத்தை நேசத்தை, நன்றியை சில ஒலிகள் மூலமே வெளிப்படுத்தியிருக்கும் விதம் நெகிழ்ச்சியாக உள்ளது.
அதனை அவரது அம்மா மொழி பெயர்த்து கூறியிருப்பதாவது: என் அப்பாதான் என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம். என் வாழ்க்கைக்கு தூணாக இருக்கிறார். நான் கண்ட முதல் ஹீரோ அவர்தான். எனக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த மகான் அவர். நான் இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு அப்பா தான் காரணம். அவர் இல்லாமல் நான் இல்லை. வாழ்நாள் முழுக்க அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். அதை எப்படி தீர்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை. சமுத்திரகனியும் எனக்கு அப்பா மாதிரிதான். காட்பாதர் அவர். என்று அபிநயா கூறியுள்ளார்.