அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
என்னமோ நடக்குது படத்தை வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் தயாரிக்க, அண்ணன் விஜய் வசந்த் நடித்தார். அதில் மகிமா ஹீரோயின். ராஜபாண்டி இயக்கினார். இப்போது அதே டீம் அச்சமின்றி என்ற படத்தை தயாரிக்கிறது. ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. சரண்யாவுக்கு அதே அம்மா வேடம். சமுத்திரகனி சமூக போராளியாகவும், ராதாரவி கல்வி அமைச்சராகவும், ரோகினி சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாஸ், பரத்ரெட்டி, நித்யா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்ஜி இசை அமைக்கிறார்.
இந்தப் படம் கல்வியின் பெயரால் நடத்தப்படுகின்ற முறைகேடுகள், மோசடிகளை சொல்லும் படம். பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். கல்விக்கூடங்கள் மாணவர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை போதனையாக சொல்லாமல் யதார்த்தமான வாழ்க்கையோடு சொல்கிற கதை. சமூக அக்கறையுடன் உருவாகி இருக்கிறது. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. படத்தின் டீசரை வருகிற 13ந் தேதி விஷால் வெளியிடுகிறார். என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.