ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் 'இரு முகன்' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருக்கின்றன. அதாவது கடைசி ஷெட்யூல் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக சுரங்கம் போன்றதொரு பிரம்மாண்ட செட் உருவாக்கியுள்ளார்களாம். 'இரு முகன்' படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு வெளியிட ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார்கள். தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் திட்டமிட்ட தேதியில் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போகிறதாம். எனவே, சுதந்திர தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இது ஒருபுறமிருக்க, விக்ரம் நடிக்கவிருக்கும் 'கருடா' படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் துவங்குகிறது. விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன்' படத்தை இயக்கிய திரு, 'கருடா'வை இயக்குகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கருடா படத்தின் கதைக்களம் பாகிஸ்தானைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.
பாகிஸ்தானிலேயே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அதற்காக முயற்சி செய்தனர். அனுமதி கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக, கிட்டத்தட்ட பாகிஸ்தானைப்போலவே ராஜஸ்தானில் உள்ள சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்களாம். 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு 'கருடா'வை வெளியிட உள்ளனர்.