அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
மருது படத்தை தொடர்ந்து விஷால் கமிட்டான படம் ''கத்திச்சண்டை''. சுராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த வடிவேலு, இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக என்ட்ரி கொடுக்கிறார். கூடவே சூரியும் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடந்தது. விஷால், வடிவேலு, சூரி, இயக்குநர் சுராஜ் உள்ளிட்டவர்களுடன் இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
கத்திச்சண்டை படத்தில் நடிப்பது குறித்து வடிவேலு கூறியுள்ளதாவது... ''இந்த நாள் மிகவும் சிறப்பான நாள். நிறைய ஹிட் கொடுத்த இயக்குநர் உடன் திரும்பவும் வேலை பார்க்க போகிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணம் நடிகர் சங்கத்தின் அடுத்தடுத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாகவும், ஹீரோவுக்கு பக்கபலமாக இருக்க கூடிய எந்த ரோலிலும் நடிப்பேன் என்றவரிடத்தில் அரசியல் குறித்த கேள்வி கேட்டபோது அய்யய்யோ அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்'' என்றார்.
சூரி கூறியதாவது... ''விஷால் உடன் எனக்கு இது நான்காவது படம். அதோடு வடிவேலு உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, அவருடன் இணைந்து நடிக்கும் நாளை எண்ணி ஆவலாய் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் சுராஜ் கூறியதாவது... ''என் மீது நம்பிக்கை வைத்து விஷால் இந்தப்படத்தை கொடுத்துள்ளார். காமெடி கம் ஆக்ஷ்ன் படமாக பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும். தலைநகரம், மருதமலை படத்திற்கு பிறகு வடிவேலு உடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளேன். இப்படத்தில் வடிவேலு டாக்டர் பூத்ரி என்ற ரோலில் கலக்க உள்ளார் என்றார்.
விஷால் பேசும்போது... ''சுராஜ் உடன் நான் இணையும் முதல் படம் இது. நல்ல கதையம்சம் உள்ள இப்படம் இருக்கும். என்னுடன் ஜெகபதி பாபு நடிக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு சுமார் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் வடிவேலுடன் நடிக்கிறேன். முதன்முறையாக தமன்னா எனக்கு ஹீரோயினாக நடிக்கிறார். மே 9ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹிப்-ஹாப், ஆதி, ரிச்சர்ட் போன்றவர்கள் இசை மற்றும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றுகிறார்கள். தெரிந்த முகங்களுடன் வேலை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. இங்கு யாருக்கும் எந்த பொறாமையும் இல்லை, விருப்பப்பட்டு அனைவரும் வேலைபார்க்கும் படம் இதுவாகும் என்று கூறியுள்ளார்.