ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த சந்திரமுகி ஹிட்டுக்குப்பிறகு பி.வாசு இயக்கிய பரமசிவன், தொட்டால் பூ மலரும், குசேலன், புலி வேசம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாக அமையவில்லை. அதனால் தனது ஆரம்ப காலத்திலேயே கன்னடத்தில் ராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இயக்கிய வந்த பி.வாசு, மறுபடியும் கன்னட சினிமாவில் என்ட்ரி ஆனார். சில நேரடி படங்களை இயக்கியவர் திரிஷ்யம் ரீமேக் படத்தை கன்னட ரவிச்சந்திரன்-நவ்யா நாயரை வைத்து இயக்கி வெற்றி பெற்றார். அதனால் இப்போது கன்னட நடிகர் சிவ ராஜ்குமாரை வைத்து சிவலிங்கா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனது மகனான நடிகர் ஷக்தியையும் செகண்ட் ஹீரோவாக நடித்து வைத்துள்ளார் பி.வாசு.
தமிழில், ஷக்தி நடித்த தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், தற்காப்பு ஆகிய படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டடிக்காததால் ஒரு சேஞ்சுக்காக மகன் ஷக்தியை இந்த படத்தில் நடிக்க வைக்கிறாராம் பி.வாசு. முதலில் ஒரு சிறிய கேரக்டரில் அவரை நடிக்க வைக்கயிருந்தவர். பின்னர் அவரது கேரக்டரை இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு பெருசுபடுத்தி விட்டாராம். மேலும். இதே படத்தை அடுத்து தமிழில் ஒரு முன்னணி ஹீரோவை வைத்து ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ள பி.வாசு, அந்த படத்திலும் ஷக்தியை நடிக்க வைக்கிறாராம்.