ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது புரூஸ்லி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கும் படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. இது பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் வசனம். டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ஆனந்தி ஹீரோயின். இவர்கள் தவிர கருணாஸ், சரவணன், யோகி பாபு நடிக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். நாக்கு இங்கோ பேருண்டி என்ற தலைப்பில் தெலுங்கிலும் தயாராகிறது.
படத்தின் தலைப்பு அனுமதி பெறுவதற்காக நேற்று முன்தினம் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினியை சந்தித்தனர். அவரும் தன் வசனத்தை தலைப்பாக வைக்க ஒப்புதல் அளித்து விட்டு படம் வெற்றி பெற வாழ்த்தியும் அனுப்பினார். படத்தின் பர்ஸ்ட்லுக்கை நேற்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். ரஜினியின் வசனம் படத்தின் டைட்டில் என்றால் பர்ஸ்ட்லுக்கும் பாட்ஷா லுக்தான். ஆட்டோ டிரைவர் மாணிக்கத்தை வில்லன் ஆனந்தராஜ் மின் கம்பத்தில் கட்டி வைத்து மழையில் அடித்து விளாசுவார். ஒரு கட்டத்தில் மாணிக்கத்தின் தங்கையை மானபங்கம் செய்ய முயற்சி செய்யும்போது மாணிக்கம், பாட்ஷாவாக மாறுகிற பவர்புல் காட்சி இது. இதைய பர்ஸ்ட்லுக் ஆக்கியிருக்கிறார்கள்.