ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் பைட்டராக இருந்தவர் நான் கடவுள் ராஜேந்திரன். அந்த சமயத்தில் சினிமாவில் சரியான வருமானம் இல்லாமல் சென்னையிலுள்ள டிரஸ்ட் புரத்தில் ஒரு சைக்கிள் கடையும் நடத்தி வந்திருக்கிறார். அதன்பிறகு, ஒரு படத்துக்காக அவுட்டோர் சென்றபோது ஒரு தொட்டியில் கெமிக்கல் தண்ணீர் இருப்பது தெரியாமல் அதற்குள் இறங்கி குளித்தபோது அவரது தலையில் இருந்த அனைத்து முடிகளும் கொட்டி விட்டதாம். அதன்பிறகு அவர் தலையில் முடியே முளைக்கவில்லையாம். இதனால் தனது வாழ்க்கையே போய் விட்டது போல் பீல் பண்ணிக்கொண்டிருந்தாராம் ராஜேந்திரன்.
ஆனால் அந்த நேரத்தில் தனது நான் கடவுள் படத்திற்கு வில்லன் தேடிய டைரக்டர் பாலாவின் பார்வையில் ராஜேந்திரன் பட்டதை அடுத்து அவரை அப்படத்தின் கொடூர வில்லனாக்கி விட்டார். அந்த மொட்டைத்தலைதான் அவருக்கு அந்த வாய்ப்பையே வாங்கிக்கொடுத்திருக்கிறது. அதன்பிறகு நான் கடவுள் ராஜேந்திரனான அவர், சினிமாவில் வேகமாக வளர்ந்து இப்போது குறிப்பிடத்தக்க காமெடியன்களில் அவரும் ஒருவராகி விட்டார்.
ஆக, அப்போது தலைமுடி போனதை நினைத்து பீல் பண்ணினேன். ஆனால் தலையில் மொத்த முடியும் கொட்டிய பிறகுதான் நான் நீண்டகாலமாக தட்டி வந்த சினிமா கதவுகள் பெரிய அளவில் திறந்தது. அந்த வகையில், மொட்டைத்தலைதான் எனக்கு ராசியாகியிருக்கிறது என்கிறார் நான்கடவுள் ராஜேந்திரன்.