ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தர்.சியின் அரண்மனை படத்திற்கு பிறகு ராய்லட்சுமி பேய் வேடத்தில் நடித்துள்ள படம் சவுகார்பேட்டை. வடிவுடையான் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கிறார். கதைப்படி ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி இருவரும் காதலர்கள். அவர்களை அடித்து கொன்று விட, பின்னர் ஆவியாக வந்து பழிவாங்குவதுதான் இப்படம். குறிப்பாக, ஆவியாக அவர்கள் காதலிப்பது, டூயட் பாடுவது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் உள்ளது. அதற்காக சுடுகாட்டில் படமாக்கியிருப்பதோடு, அவர்களுடன் நூற்றுக்கணக்கான பேய்கள் நடனமாடுவது போலவும் மிரட்டலாக படமாக்கியிருக்கிறார்கள்.
அதோடு, க்ளைமாக்சில் தங்களை கொன்றவர்களை பழிவாங்குவதற்கு முன்பு ஸ்ரீகாந்த்- ராய்லட்சுமி இருவரும் ருத்ரதாண்டவம் ஆடுவார்களாம். மோதிப்பார்ப்பேன் என்று விவேகா எழுதியுள்ள அந்த பாடலில் இதுவரை எந்த படத்திலும் ஆடாத அளவுக்கு ஆவேச நடனம் ஆடியிருக்கிறாராம் ராய்லட்சுமி. இதனால் இந்த படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம் என்று கூறிவரும் ராய்லட்சுமி, அடுத்தடுத்து மேலும் சில பேய் படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். மேலும், இந்த படத்தில் ஆவி காதலர்கள் என்ட்ரியாகும் ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான பின்னணி இசையமைக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக, இசைக்கருவிகளுக்கு பதிலாக ஆண்கள் கோரசாக அச்சுறுத்தும் வகையில் குரல் கொடுப்பதையே பின்னணி இசையாக்கியிருக்கிறாராம் இசையமைப்பாளர் ஜான் பீட்டர்.