ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைவன், என்னமோ ஏதோ, நாரதன் போன்ற படங்களில் நடித்தவர் நிகிஷா பட்டேல். தற்போது சிம்ரன் போலீஸ் வேடத்தில் நடித்து வரும் கரையோரம் படத்தில் நடித்துள்ளார். இதே படத்தில் இனியா ஒரு ஆக்சன் ரோலில் நடிக்க, நிகிஷா பட்டேல் கவர்ச்சிகரமான ரோலில் நடித்திருக்கிறார். அதோடு, தெலுங்கு, கன்னட படங்களிலும் கவர்ச்சி புயலாக வீசிக்கொண்டிருக்கிறார் நிகிஷா பட்டேல்.
இந்த நிலையில், விஜய்வசந்த் நடித்து வரும் அச்சமின்றி என்ற படத்தில் முதலில் நிகிஷா பட்டேல்தான் நடிக்கயிருந்தார். ஆனால் திடீரென்று அவருக்கு பதிலாக சிருஷ்டி டான்கேயின் பெயர் இடம்பெற்று அவர் நடிக்கத் தொடங்கினார். இதனால், நிகிஷாவுக்கு தமிழில் சரியான மார்க்கெட் இல்லாததால் அந்த வாய்ப்பு சிருஷ்டிக்கு போய் விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுபற்றி நிகிஷாவைக்கேட்டால், அச்சமின்றி படத்தில் நான்தான் நடிக்கயிருந்தேன். ஆனால், முதலில் அவர் கேட்ட கால்சீட் தேதியை பின்னர் மாற்றினர். அப்படி அவர்கள் கேட்ட தேதியில் நான் ஒரு கன்னட படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அதனால் என்னால் மாற்று தேதி தரமுடியாது என்று கூறினேன். அதன்காரணமாக வேறு நடிகையை புக் பண்ணினார்கள். ஆக, என்னிடம் கால்சீட் இல்லாததால்தான் அந்த படம் வேறு நடிகைக்கு சென்றது என்கிறார் நிகிஷா பட்டேல்.