ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடை மழை பெய்தாலும் சரி.... தமிழகம் வெள்ளத்தில் மிதந்தாலும் சரி... அதைப் பற்றி கவலைப்படாமல் வாரந்தோறும் ஏகப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. கடந்த வாரம் உப்புக்கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144 ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. வரும் வாரத்தில் ஈட்டி, ரஜினி முருகன், உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய 4 படங்கள் வெளியாக உள்ளன.
அதற்கு அடுத்த வாரம் அதாவது டிசம்பர் 11 அன்று கரையோரம் மற்றும் சில படங்கள் வெளியாகின்றன. டிசம்பர் 18 அன்று தனுஷ் நடித்த தங்கமகன், ஹலோ நான் பேய் பேசுகிறேன், உதயநிதி நடித்த கெத்து ஆகிய படங்களும், டிசம்பர் 24 அன்று பசங்க-2, ஜில் ஜங் ஜக், அஞ்சல, ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இவை தவிர சவுகார்பேட்டை, உட்பட அரை டஜன் படங்களும் டிசம்பரில் வெளியாகத் தயாராக உள்ளன. ஏறக்குறைய டிசம்பர் மாதத்தில் மட்டும் 15க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் சூழ்நிலைக்கு ஒருவகையில் தணிக்கைக்குழுவும் காரணம் என்று சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதாவது தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்ட படங்களை உடனடியாய் பார்க்காமல் சுமார் ஒரு மாதத்துக்கு மேல் காலம் கடத்தியதால்தான் நிறைய படங்கள் தேங்கி தற்போது ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.