ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்சார் செய்யப்பட்டு வெளியிடத்தயாராக பல படங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களும் அடக்கம். சில படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றால், சில படங்களுக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள்தான் கிடைக்கவில்லை. டிசம்பர் மாதம் வெளியிடத் தயாராக கெத்து, டார்லிங்-2, பசங்க -2, ரஜினி முருகன், சவுகார்பேட்டை, கரையோரம் உட்பட ஏறக்குறைய ஒரு டஜன் படங்கள் காத்திருக்கின்றன.
இந்த போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் நவம்பர் மாதம் 27 அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் பசங்க-2, சவுகார்பேட்டை ஆகிய படங்களை களத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர். அதற்கு முன்னதாக பக்காவாக திட்டமிட்ட ஈட்டி படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பிரபல விநியோகஸ்தரான காஸ்மோ வில்லேஜ் சிவா மூலம் தமிழகம் முழுக்க சுமார் 350 தியேட்டர்களை பிளாக் பண்ணிவிட்டார்.
தீபாவளிக்கு வந்த வேதாளம் படம் இன்னமும் 200 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தூங்காவனம் படமும் 100 தியேட்டர்களில் ஓடிக்கொடிணருக்கிறது. அதற்கு முன் வெளியான நானும் ரௌடிதான் படம் 50 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படங்களே 700 தியேட்டர்களை ஆக்ரமித்துவிட்டதால் பசங்க-2 படத்தை நவம்பர் 27 அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டார் சூர்யா. சவுகார்பேட்டை படத்துக்கோ தியேட்டர் கிடைக்கவில்லை. ஈட்டிக்குப் போட்டியாக வரவிருந்த சவுகார்பேட்டை, பசங்க - 2 ஆகிய இரண்டு படங்களும் வழிவிட்டதால் போட்டியின்றி களத்தில் பாய்கிறது ஈட்டி.