ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அசல் படத்துக்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சரண் தயாரித்து இயக்கும் படம் ஆயிரத்தில் இருவர். வினய்யுடன் புதுமுகங்கள் சமுத்ரிகா, ஸ்வஸ்திகா, நடித்துள்ளனர், பரத்வாஜ் இசை அமைத்துள்ளார், கிருஷ்ண ரமணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் மூவி பேக்கடரியும், சங்கர் கே. பிரவீன் பிலிம்சும் இணைந்து தயாரித்துள்ளது.சுமார் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. வருகிற தீபாளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதில் வினய், 2 வேடங்களில் நடித்திருக்கிறார். திருநெல்வேலி கிராமத்து இளைஞனாகவும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் மார்டன் இளைஞனாகவும் நடித்திருக்கிறார். திருநெல்வேலி, ஐதராபாத், பாங்காக், துபாயில் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கு எண் படத்தில் பணக்கார பெண்ணாக அதாவது வில்லியாக நடித்திருந்த ரித்திகா சீனிவாசன் இதிலும் வில்லியாக நடித்திருக்கிறார். பிரதீப் ராவத், மயில்சாமி, இளவரசு, சனா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.