ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வம்சம் பட நாயகன் அருள்நிதி அதன்பிறகு நடித்த படங்களில் மெளனகுரு, டிமான்டி காலனி ஆகியவை அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதில் மெளனகுரு படத்தை தற்போது இந்தியில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட டிமான்டி காலனி சூப்பர் ஹிட்டானது. இந்த படமே அருள்நிதியை நல்லதொரு கமர்சியல் ஹீரோவாக்கியது.
அதையடுத்து, அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் வெளியான நிலையில், தற்போது ஈரம் அறிவழகன் இயக்கத்தில் ஆறாது சினம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
மேலும், அறிவழகன் இயக்கிய முதல் படம் ஈரம் பேய் கதையில் உருவானது. அந்த படம் அவருக்கு வெற்றியாக அமைந்தது போன்று அருள்நிதி நடித்ததில் டிமான்டி காலனி என்ற பேய் படம்தான் அவர் நடித்ததில் மெகா ஹிட்டானது. அந்த வகையில், இந்த படத்தை த்ரில்லர் கலந்த பேய் கதையில் இயக்குகிறாராம் அறிவழகன். இரண்டு பேருக்குமே பேய் கதையில் உருவான படங்கள் ஒர்க்அவுட் ஆனதால், இந்த படத்திலும் அந்த செண்டிமென்ட் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.