ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துவிட்டார். அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். டிவி நடிகையான தீபாவெங்கட்தான் நயன்தாராவுக்காக பின்னணி குரல் கொடுத்து வருகிறார். நயன்தாராவுக்கு தமிழ் நன்றாகப் பேசத் தெரியும். அப்படியும் அவரை யாரும் சொந்தமாக டப்பிங் பேச அழைக்கவில்லையா அல்லது அழைத்து நயன்தாரா மறுத்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் தன் புதிய காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் நானும் ரௌடிதான் படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 'மாயா'வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது 'நானும் ரௌடிதான்' படம்தான்.
'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், ''முதன்முறையாக நயன்தாரா தன் சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார், அவரது இந்த முயற்சிக்கு நன்றி என்று நயன்தாராவுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 21 அன்று ரிலீசாகிறது.