ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. மும்பை நடிகையானபோதும் இவரது முக அமைப்பு தென்னிந்திய நடிகை சாயலில் இருந்ததால் அந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் அவருக்கு படங்கள் கமிட்டாகின. அதனால் இப்போது சிறிய படங்கள் என்றாலும் நான்கைந்து படங்கள் அவரது கைவசம் உள்ளன. மேகா படத்தையடுத்து வெளியான டார்லிங், எனக்குள் ஒருவன் படங்கள் சிறிய கதாபாத்திரங்களிலேயே நடித்த சிருஷ்டி, பின்னர் புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்தில் நடித்தவர், நேற்று வெளியான கத்துக்குட்டி படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக இளவட்ட ரசிகர்களை அட்டாக் பண்ணும் வகையில் இயல்பாக நடித்துள்ளார் அவர்.
இதுபற்றி சிருஷ்டி டான்கே கூறுகையில், தமிழ்சினிமாவில் நான் நடித்த முதல் படமான மேகாவில் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். அதன்பிறகுதான் எனக்கு தமிழில் நடிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதோடு, ஒரே நேரத்தில் பல மொழிகளிலும் நடிப்பதை விட ஒரே மொழியில் கவனம் செலுத்தினால் முன்னணி இடத்தை பிடித்து விடலாம் என்று நம்பினேன். அதற்கேற்ப கத்துக்குட்டிக்குப் பிறகு வில் அம்பு, நவரச திலகம், அச்சமின்றி, காலக்கூத்து என பல படங்கள் எனக்கு கிடைத்தன. அந்த வகையில், இப்ப நான் ரொம்ப பிஸி. மேலும் புதிய படங்களில் என்னை ஒப்பந்தம் செய்யவும் பல நிறுவனங்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்று கூறும் சிருஷ்டி டான்கே, இதுவரை நான் ஹீரோக்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் இனிமேல் கதை மட்டுமின்றி ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறேன். சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தால் மட்டுமே முடியும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கிறேன் என்கிறார் சிருஷ்டி டான்கே.