ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சங்கம் தேர்தல் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. விஷாலின் பாண்டவர் அணியினர் தமிழகம் முழுக்க நாடக நடிகர்களிடம் ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் வடிவேலு. அப்போது அவர் பேசும்போது... நடிகர் சங்கம் களவு போய்விட்டது. அதை கண்டுபிடிப்பது இப்போது தான் முதல் வேலை. இந்த தேர்தலும் அதற்காகத்தான்.
எதிரணியனருக்கு பயம் வந்துவிட்டது, அதனால் தான் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகின்றனர். நேற்று ராதிகா பேசும்போது விஷாலை பார்த்து விஷால் ரெட்டி விஷால் ரெட்டி என்று குறிப்பிடுகிறார். எதற்காக ஜாதியை சொல்லி குறிப்பிட வேண்டும். நடிகர்களுக்கு ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது. ஒருவேளை நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட்டால் அவரை ரஜினிகாந்த் ராவ் என்று சொல்வார்களா...?
தம்பி சிம்பு நேற்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார். அவர் பேசவில்லை, அவரை அப்படடி பேச தூண்டிவிட்டுள்ளனர். அவர் அப்படி பேசியது தவறு தான். எதிரணியினர் நாடக, நடிகர்களை ஒருபோதும் மதித்தது கிடையாது. பாண்டவர் கண்டிப்பாக நன்மை செய்யும். எங்களது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கண்டிப்பாக இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று களவு போன நடிகர் சங்க கட்டடத்தை மீட்போம் என்றார்.
மேலும் வடிவேலுவிடம், நடிகர் சங்க தேர்தலில் பிரச்சாரம் செய்வது போன்று வருகின்றன சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்காவது பிரச்சாரம் செய்வீர்களா..? என்று கேட்டபோது, நிச்சயமாக கிடையாது, அந்தமாதிரி எண்ணம் எதுவும் எனக்கு கிடையாது, மேலும் நான் எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லை, கடந்தமுறை எதற்காக பிரச்சாரம் செய்தேன் என்று எல்லோருக்கும் தெரியும் என்றார்.