மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நான், வருமான வரி ஏய்ப்பு செய்யவில்லை; தவறான தகவல்களை வெளியிட்டு என் மனதை புண்படுத்தாதீர்கள் என, நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் விஜய் உள்ளிட்ட புலி படக்குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் விஜய் 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதை விஜய் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில், வருமான வரித்துறையினர் சோதனையிடுவது இயல்பானது. கடந்த வாரம், என் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். நானும், என் குடும்பத்தினரும், அலுவலகத்தினரும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். நான்கு ஆண்டுகளாக, நான் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என, உண்மைக்கு புறம்பான தகவல்கள், சில பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் வந்தது கண்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.
நான், சட்டத்தை மதிப்பு நடப்பவன்; நடப்பு நிதியாண்டு வரை, என் தொழில் மற்றும் வருமான கணக்கை, குறித்த நேரத்தில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, உரிய வரிகளை முறையாக செலுத்தியுள்ளேன். வருமான வரித்துறைக்கு, எப்போதும் முழு ஒத்துழைப்பு தருபவன் நான். எனவே, உண்மைக்கு புறம்பான, தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு, என் மனதை புண்படுத்த வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.