ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் வெனிஸ் நகர திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறப்பு விருது பெற்றது. வெற்றிமாறனின் இந்த சாதனையை மற்ற இயக்குநர்கள் பொறாமையோடு பார்க்கவில்லை. மாறாக, வெற்றிமாறனுக்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று பெயர் எடுத்த இயக்குனர் மிஷ்கின் வெற்றிமாறனுக்கு நீண்ட பாராட்டு கடிதம்எழுதி உள்ளார்.
அதை அப்படியே தன் பி.ஆர்.ஓ. மூலம் ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். அதில், ''நீ கலையின் உச்சியை தொட்டுவிட்டாய்! உன் வாழ்வின் அர்த்தத்தினை முழுமையாக்கும் படமொன்றினை படைத்து விட்டாய்! பாலுமகேந்திரா மட்டும் இருந்திருந்தால் உன்னை கட்டித்தழுவி நெற்றியில் முத்தமிட்டு சந்தோஷத்தில் மூழ்கியிருப்பார். ஒரு கடுமையான, உண்மையான திரைப்படமே 'விசாரணை'. மனிதம் என்பதனை இப்படம் எனக்கு உணர்த்தியது. இந்த படத்தை மக்கள் மடியில் வைத்து தாலாட்டுவார்கள்! இனி, உன்னையும் இதுபோன்ற படைப்புகளையும் மக்கள் பாராட்டுவார்கள்! நண்பா, உன் 'விசாரனை' திரைப்படம் ஞானத்தையும் என் வாழ்வின் புரிதலையும் உயர்த்துகிறது'' என்று பாராட்டு தெரிவித்துள்ளார் மிஷ்கின்.
அது மட்டுமல்ல, மணிரத்னம், ஷங்கர் உட்பட பல பிரபல இயக்குநர்களை அழைத்து தன் அலுவலகத்தின் மொட்டைமாடியில் வெற்றிமாறனுக்கு மினி பாராட்டு விழாவையும் நடத்தி இருக்கிறார். பாராட்டு விழாவுக்குப் பிறகு பார்ட்டி நடைபெற்றதாம். மிஷ்கின் ஏற்பாடு செய்த பாராட்டுவிழாவைக்கண்டு நெகிழ்ந்துபோனாராம் வெற்றிமாறன்.