பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், 24 செயற்குழு உறுப்பினர்கள் ஆக 29 பதவிக்கான போட்டிக்கு மொத்தம் 71 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆய்வில் அலாவுதீன், பாலகிருஷ்ணராவ், வாசுதேவன் ஆகிய 3 பேரின் மனுக்கள் போதிய ஆவணங்கள் இணைக்காததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 68 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் விஷால், சரத்குமார் அணி¬யைத் தவிர 10 பேர் சுயேட்சைகளாக மனு தாக்கல் செய்துள்ளர். வேட்புமனுவை வாபஸ் பெற வருகிற 7ந் தேதி கடைசி நாள், 8ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட இருக்கிறது.