ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரைத்தப்பட்டை என சினிமாவுக்கு வந்து 16 வருடங்களில் 7 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் டைரக்டர் பாலா. எண்ணிக்கையில் குறைவான படங்களே என்றாலும், அவரது ஒவ்வொரு படங்களுமே பேசப்பட்டவை. அந்த வகையில், தரமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிக காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறார் பாலா.
அதோடு, மாயாவி, பிசாசு, சண்டிவீரன் போன்ற படங்களை தனது பி ஸ்டுடியோ சார்பில் தயாரித்தும் இருக்கிறார். இந்த நிலையில், ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய நான் கடவுள் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கயிருப்பதாக முன்பே செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அதுபற்றிய தகவல்களே இல்லை.
இந்த நிலையில், இதுகுறித்து சமீபத்தில் டைரக்டர் பாலாவிடம் கேட்டபோது, நான் கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நான் எப்போதுமே தயாராகத்தான் உள்ளேன். ஆனால் முதல் பாகத்தில் நடித்த ஆர்யா இரண்டாம் பாகத்திலும் நடிக்க வேண்டுமே. அதுதான் பிரச்சினையே. அவர் நடிக்க முன்வந்தால் நான் கடவுள்-2 எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்று சூசகமாக பதிலுரைத்துள்ளார் பாலா.