ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கில் தயாராகும் படங்கள் பொதுவாக இரண்டு மொழிகளிலும் ஒரே சமயங்களில்தான் வெளியாகும். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் தமிழில் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' என்ற பெயரிலும் ஒரே சமயத்தில் தயாரான இந்த படங்களில், தெலுங்குப் படம் மட்டுமே இன்று வெளியாகிறது. ஆனால், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்தை எப்போது வெளியிடப் போகிறார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
ஒரு மொழியில் முதலில் வெளியிட்டு அந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லையென்றால் இரண்டாவது மொழியில் தயாரான அந்தப் படத்தின் வியாபாரமும், ரிசல்ட்டும் பெரிதும் பாதிக்கப்படும். அதே சமயம் வெற்றி பெற்று விட்டால் அது கூடுதல் பலத்தைக் கொடுத்துவிடும். இப்போதெல்லாம் ஒரு மொழியில் எடுத்து மற்ற மொழியில் டப்பிங் செய்யும் படங்களையும் ஒரே நாளில்தான் வெளியிடுகிறார்கள். அதற்கு 'பாகுபலி, ஸ்ரீமந்துடு' ஆகீய தெலுங்குப் படங்களையும், 'பாயும் புலி, புலி' ஆகிய தமிழ்ப் படங்களையும் சமீபத்திய உதாரணமாகச் சொல்லலாம்.
ஏற்கெனவே, எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் பல தடங்கல்களைத் தாண்டி இப்போதுதான் வெளியீட்டிற்கு வந்திருக்கிறது. அப்படியிருக்கும் போது தெலுங்கில் வெளியாகும் போதே தமிழிலும் ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்க வேண்டும் என்றே வியாபார வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.