ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபாலிக்கு பிறகு உலக சினிமாவின் கவனம் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. பாகுபலியின் பட்ஜெட்டும், அது கொடுத்த வசூலும், உலக தரத்திற்கு நம்மாலும் சினிமா தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கையில் அடுத்து உலக புகழ்பெற்ற டைட்டானிக் படம்போன்ற ஒரு படத்தை தெலுங்கில் எடுக்க இருக்கிறார்கள். இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.
1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பிஎன்எஸ் ஹாஜி என்ற நீர்மூழ்கி கப்பல் (அருகில் உள்ள படத்தில் இருப்பது) கடலில் முழ்கி அதில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். இந்த சம்பவத்தை கருவாக கொண்டு சங்கல்ப் என்ற இளைஞர் ப்ளூபிஷ் என்ற தலைப்பில் திரைக்கதை எழுதியுள்ளார். அதனையே படமாக்க உள்ளனர் இயக்குபவரும் சங்கல்ப் ரெட்டிதான்.
ராணா கப்பல் கேப்டனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பல கோடி செலவில் நீர்மூழ்கி கப்பல் செட் போடப்படுகிறது. பெரும்பாலான காட்சிகள் நீர்மூழ்கி கப்பலுக்குள்ளேயே எடுக்கப்பட இருக்கிறது. 100 கோடி ரூபாய் செலவில் பிவிபி சினிமா தயாரிக்கிறது.