ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி த்ரிஷா நடித்த படம் - பூலோகம். பேராண்மை படத்தில் நடித்தபோது எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாணகிருஷ்ணன் சொன்ன கதையைக் கேட்டு இம்ப்ரஸ்ஸான ஜெயம்ரவி நடிக்க ஓகே சொன்னார். அதன் பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பூலோகம் கதையைக் கேட்டு அந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்தார்.
2010 ஆம் ஆண்டு இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி, 2012 ல் படப்பிடிப்பு தொடங்கியது. பூலோகம் படம் முடிவடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பல படங்களை தயாரித்து வந்ததால் அந்தப் படங்களை ரிலீஸ் செய்துவிட்டு பூலோகம் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தார். இதற்கிடையில், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக பூலோகம் படத்தை வெளியிட முடியாதநிலை உருவாகிவிட்டது.
அதற்கு இன்னொரு காரணமும் உண்டு... ஜெயம் ரவிக்கு அப்போது மார்க்கெட் இல்லை என்பதே அது. சில மாதங்களுக்கு முன் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயற்சி செய்திருந்தால் சாத்தியமாகி இருக்கும். ஏனோ அந்த நல்ல நேரத்தை தவறவிட்டுவிட்டனர்.
தற்போது தனி ஒருவன் படம் வெற்றியடைந்த காரணத்தினால் ஜெயம்ரவி மார்க்கெட் மறுபடி சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயன்றால்தான் உண்டு. இந்த சந்தர்ப்பத்தையும் தவறிவிட்டால் பூலோகம் படத்தை இனி எக்காலமும் வெளியிட முடியாது என்கின்றனர் விநியோகஸ்தர்கள். 5 கோடி இருந்தால்தான் பூலோகம் படத்தை வெளியிட முடியும் என்ற இக்கட்டான சூழலில் இருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.