ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இது எழுத்தாளர்கள் சினிமாவில் பிரவேசிக்கும் காலம். பாலகுமாரன், சுஜாதாவைத் தொடர்ந்து ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமாரைப் போல இரட்டை எழுத்தாளர்கள் சுபாவும் பல படங்களில் எழுதியுள்ளனர், எழுதியும் வருகிறார்கள். வார இதழில் தொடராக எழுதி வந்த கதையை யட்சன், என்ற அதே பெயரில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் படமாகியுள்ளது.
ஒரு நாவல் அல்லது கதை திரைப்படமாக வருகிறபோது மாற்றங்கள் செய்யப்படுவது உண்டு. சிலநேரம் அது மூலக்கதையை சிதைத்து விட்டதாக புகார் கூறுவதுண்டு. உங்கள் கதை என்ன ஆனது என்று சுபாவிடம் கேட்ட போது....
பத்திரிகை எழுத்து என்பது வேறு வடிவம், சினிமாவுக்கான எழுத்து என்பது இன்னொரு வகையான வேறு வடிவம். இரண்டும் தனித்தனியானவை, ஒப்பிடக் கூடாதவை. பத்திரிகை எழுத்தில் எல்லாவற்றையும் எழுதியே விளக்க வேண்டும். சினிமாவில் பலவற்றைக் காட்சிப்படுத்தலாம், அந்த வசதி சினிமாவில் உண்டு. இது தனியான தளம் இதைப் புரிந்து கொண்டே எழுதுகிறோம். கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் தான் ஆட வேண்டும் கோல்ஃப் ஆடக் கூடாது. இந்த விதிகளைப் புரிந்து கொண்டுதான் சினிமாவுக்கு எழுதுகிறோம் என்று இரட்டை எழுத்தாளர்கள் சுபாவில் முன்னவர் சுரேஷ் கூற பின்னவர் பாலகிருஷ்ணன் அதை ஆமோதித்தார்.