ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதலில் விழுந்தேன் படத்துக்குப்பிறகு நகுலுக்கு எந்த படமும் செட்டாகவில்லை. கதைக்காக தன்னை முழுசாக மாற்றி வருடக்கணக்கில் அவர் சிரத்தை எடுத்து நடித்தாலும் தியேட்டருக்கு வந்த வேகத்திலேயே அவரது படங்கள் ஓட்டம் பிடித்து விடுகின்றன. அந்த வகையில், நகுலை அதிகம் ஏமாற்றிய படம் வல்லினம். இந்த படம் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கப்போகிறது என்று ரொம்ப எதிர்பார்த்திருந்தார் அவர்.
ஆனபோதும் அதன்பிறகு அவர் பெரிதாக எதிர்பார்க்காமல் நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுல் நடித்த இளம் விஞ்ஞானி வேடம் அவருக்கு சாதகமாக அமைந்தது. அதனால் அதற்கடுத்து அவர் நடித்திருந்த நாரதன் படம் உற்சாகத்துடன் வளர்ந்து வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படத்தின் தயாரிப்பாளரால் நகுலுக்கு பேசினபடி சம்பளம் கொடுக்க முடியாமல் திரைக்குப்பின்னால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்த படம் நாரத வேலைகளால் ஏற்படும் கலகங்களும், அதனால் ஏற்படும் நன்மைகளுமாக நல்ல கமர்சியல் கதையில் உருவாகியிருக்கிறதாம். அதோடு ஒரு பாடலில் இன்றைய இளவட்டங்களுக்கு ஜாலியாக கருத்தும் சொல்லியிருக்கிறாராம் நகுல். பழைய தத்துவப்பாடல்களைப் போன்று அந்த பாடல் அமைந்து விடக்கூடாது என்பதற்காக அந்த பாடலில் அவருடன் ஒரு அயிட்டம் நடிகையை ஆடவிட்டு கவர்ச்சி கலந்து கருத்து சொல்லியிருக்கிறார்களாம். ஆக, நாரதன் படம் இதுவரை இல்லாத வகையில் நகுலை ஒரு புதிய கோணத்தில்தான் வெளிப்படுத்தும் என்கிறார்கள்.