ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான௦வர் நடிகர் ரிச்சர்டு. அஜித்தின் மச்சானான இவர் அதன்பின்னர் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனால் அவருக்கான ஹீரோ அந்தஸ்த்து இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெற்றி பெற சினிமாவில் போராடி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் காட்டுராணி கோட்டை என்ற த்ரில்லர் படம் வௌியாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்பு காட்சி நடந்தது. அப்போது நம்மிடம் ரிச்சர்டு பேசியதாவது...
ஒவ்வொரு படமும் நன்றாக வரும், இந்தப்படம் நமக்கு கை கொடுக்கும் என்று எண்ணித்தான் நடிக்கிறேன். சினிமாவில் வெற்றி பெறும் வரை நான் போராடுவேன். என்றவரிடம் சமீபத்தில் அஜித், நடிகர் அப்புக்குட்டியை வைத்து விதவிதமாக போட்டோ எடுத்தாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? என்று கேட்டபோது, 10 வருடத்திற்கு முன்பே அஜித் பெரிய போட்டோகிராபர் தான். எங்களை வைத்து விதிவிதமாக படங்கள் எடுத்துள்ளார். பிறருக்கு உதவுவது அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். சரி சினிமாவில் உங்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாரா.? என்று கேட்டால் சரியான நேரம் வரும் போது அவர் கண்டிப்பாக செய்வார் என்று கூறினார்.