ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
யாகாவாராயினும் நாகாக்க ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் எடுக்கப்பட்ட படம். ஆதிக்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் விமர்சன வரவேற்பு இருந்த அளவுக்கு வசூல் வரவேற்பு இல்லை. படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்களும் திரையுலகினரும் படம் மேக்கிங் நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் இரண்டாவது பாதியின் நீளத்தைக் குறைத்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள், அப்போது இயக்குநர் சத்யபிரபாஸ் அவர்கள் சொன்னதை ஏற்காமல் தான் செய்திருப்பதே சரி என பிடிவாதமாக இருந்தார். திரையரங்க விசிட் அடித்த போது ஆடியன்ஸ் அடித்த கமெண்ட்களில் மனம் மாறி படத்தின் நீளத்தைக் குறைத்தார்.
தெலுங்கிலும் தமிழைப் போலவே அதே நாளில் வெளியிட விரும்பினார். ஆனால் தெலுங்கில் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. அங்கு மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாவதாலும் அடுத்து பாகுபலி வருவதாலும் தள்ளிப்போயுள்ளது. தமிழைவிட தெலுங்கில் மேலும் நீளத்தைக் குறைத்து வெளியிடப் போகிறார்கள். தெலுங்கில் மலுப்பு என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் தெலுங்கில் வெளியிடுகிறது.