ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடித்துள்ள படம் நாரதன். நாகா.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் சஜித் நம்பியார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு நகுல் வராமல் புறக்கணித்தார். பேசியபடி முழு சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு தனது புது மானேஜரின் பேச்சை கேட்டுக் கொண்டு நகுல் படத்தை புறக்கணிப்பதாக படத்தின் இயக்குனர் நாகா.வெங்கடேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஒப்பந்தப்படி சம்பளம் தரவில்லை என்று நகுல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தயாரிப்பாளர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் சாராம்சம் வருமாறு:
நாரதன் படத்தில் நடிக்க எனக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் முடிந்து விட்ட பிறகும் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளத்தை முழுமையாக தரவில்லை. இதுவரை 32 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர். படத்தின் ஆடியோ விழாவிற்கும், புரமோசஷனுக்கும் முறையாக அழைக்கவில்லை. எனக்கு சேர வேண்டிய 18 லட்சத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நகுல் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.