ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் மதிக்கும் இருபடங்களாக மொழி மற்றும் 36 வயதினிலே படங்களைக் கூறி வருகிறார் ஜோதிகா. மொழி படத்தின் மீது ஜோதிகாவுக்கு தனி மரியாதை. அதன் படக்குழுவினர் மீதும் தனிமதிப்பு வைத்திருக்கிறார். அதன் அடையாளமாக, வெளிப்பாடாக மொழி இயக்குநர் ராதாமோகன் இயக்கியுள்ள உப்பு கருவாடு டீஸரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். வெளி நிகழ்ச்சிகளுக்கு வராத ஜோதிகா இயக்குநர் ராதாமோகன் மீது கொண்ட மதிப்பில் இதனைச் செய்துள்ளார்.
36 வயதினிலே படம் ஜோதிகாவுக்குள் நிறைய மன மாற்றங்களையும் நம்பிக்கையையும் ஊட்டி இருக்கிறது. 36 வயதினிலே படம் பார்த்து தங்கள் வாழ்க்கை அனுபவங்களை எழுதும் பெண்களைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறாராம். அந்தப்படம் மாற்றிய விதத்தை தாங்கள் மாறிய விதத்தைப்பற்றி எழுதப்படும் கடிதங்களை தன்னிடம் காட்டுமாறு சூர்யாவிடம் கூறியிருக்கிறாராம். ஜோதிகா காட்டிய ஆர்வத்தில்தான் அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவுவதோடு விட்டு விடாமல் பெண்களுக்கும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறவர்களை எல்லாம் கண்டறிந்து உதவுகிற திட்டத்தையும் கொண்டு வந்து இருக்கிறதாம். இதன் முதல் முயற்சியாக 25 பேர் தேர்வு செய்து உதவி செய்ததை வெகுவாக ஜோதிகா ரசித்தாராம். திறமைசாலி பெண்மணிகள் பற்றி அறிந்து வியந்து போகிறாராம். இப்படிப்பட்டவர்களை இனங்கண்டு உதவிட இந்தத் திட்டத்தை மேலும் விரிவு படுத்தவேண்டும் என்று தன் கணவர் சூர்யாவிடம் கூறியுள்ளாராம்.