விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. 'பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடித்த படம். பாண்டிராஜ் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். சில பல லட்சங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட இந்தப் படம் சுமார் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இப்படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமை மட்டும் சுமார் 3 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் வாங்கியிருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், “கோலி சோடா' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நான் வாங்கியிருக்கிறேன். இந்தப் படம் மிகவும் சிறந்த படம். அற்புதமான கதை கொண்ட இந்தப் படம் அதனுடைய படைப்பால் மட்டுமே ஓடியது. இந்தப் படத்தின் வெற்றிக்கு எந்த நட்சத்திரங்களின் பிரபலமும் தேவைப்படவில்லை. தெலுங்கில் நடிக்க உள்ள நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அது முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.