ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டாப்ஸி நடித்த படம் வெளியாகி வெகு காலமாகிவிட்டநிலையில் அவரது நடிப்பில் வை ராஜா வை மற்றும் காஞ்சனா என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளிவந்தன. இவற்றில் காஞ்சனா மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதற்கு நேர் மாறாக, வை ராஜா வை தோல்விப்படமானது. ஒரே நேரத்தில் ஒரு வெற்றிப்படத்திலும்( 'காஞ்சனா') ஒரு தோல்விப்படத்திலும்( 'வை ராஜா வை' ) நடித்த நடிகையாக டாப்ஸி இருந்தாலும் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இப்படத்திற்கு கதாநாயகியாக முதலில் புக் பண்ணப்பட்ட த்ரிஷாவை நீக்கிய பிறகு, இப்படத்தின் பைனான்ஸியரான வருண்மணியன்தான் டாப்ஸியை சிபாரிசு செய்திருக்கிறார்.
கான் என பெயர் சூட்டப்பட்டதாக சொல்லப்படும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒருவர் டாப்ஸி! இன்னொருவர் கேத்ரின் தெரசா. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் டாப்ஸிக்கு போலீஸ் ஆஃபீசர் கேரக்டராம்! அதனால் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருப்பதால் அதற்காக பிரத்தியேக பயிற்சி எடுத்து வருகிறாராம் டாப்ஸி.
கதாநாயகி டாப்ஸிக்கு போலீஸ் கேரக்டர் என்றால்... கதாநாயகன் சிம்புவுக்கு என்ன கேரக்டர்? பயந்த சுபாவமுள்ள கேரக்டராம் அவருக்கு. அது மட்டுமல்ல முருக பக்தராகவும் நடிக்கிறார். செல்வராகவன், சிம்பு முதன் முதலாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படம் காடுகளில் படமாக்கப்பட இருக்கிறதாம். இவரது இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் காட்டில்தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.