ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஸ்கர் விருதுக்கு பிறகு உலகளவில் கொண்டாடப்படும் ஒரு திரை விழா. கேன்ஸ் திரைப்பட விழா. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விருதில் உலகம் முழுவதிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா, மே 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு படங்கள் விருதுகளை குவித்தன. இந்திய படமான மாஸான் படத்திற்கும் விருது கிடைத்தது.
இந்நிலையில் இலங்கை தமிழரின் அவல நிலையை சொல்லியுள்ள தீபன் என்ற படத்திற்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப்பனை விருது கிடைத்துள்ளது. இலங்கை தமிழரின் வாழ்க்கையை சரியான முறையில் பிரதிபலித்த படம் இது. இப்படத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல இயக்குநர் ஜக்குவாஸ் ஓடியேட் இயக்கியிருந்தார்.
பிரான்ஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்த ஒரு ஆண், பெண் மற்றும் ஒரு சிறுமியின் வாழ்க்கையை கண்ணீர் மற்றும் வலிகளுடன் சொல்லியிருந்தார் இயக்குநர் ஜக்குவாஸ்.