ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹிந்தியில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் வாயிலாக நயாகியாக அறிமுகமான அழகு அலியா பட் அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ஹைவே, 2 ஸ்டேட்ஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடிதவர். இவரை நடிகர் தனுஷ் அனேகன் படத்தில் நாயகியாக்க பெரும் முயற்சி செய்தார். அதே போல் இயக்குநர் மணிரத்னமும் ஓகே கண்மணி படத்தில் நாயகியாக்க முயற்சி செய்தார். இருவருக்கும் பிடி கொடுக்காத அலியா பட்டை டோலிவுட்டில் களம் இறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாகர்ஜுனா- அமலா மகன் அகில் நாயகனாக நடிக்கும் படத்திலும் நடிக்க மறுத்த அலியா பட் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அலியா பட்டை நாயகியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி படத்தின் இந்தி மொழிமாற்ற உரிமையை கைப்பற்றி இருக்கும் கிரண் தான் அலியா பட்டை நாயகியாக அறிமுகப்படுத்தியவர். எனவே அவரின் உதவியோடு இப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெறுகின்றதாம். பாகுபலி படத்தின் வாயிலாக நாளுக்கு நாள் புகழ் பெற்று வரும் பிரபாஸிற்காவது அலியா பட் சம்மதம் தெரிவிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.