ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
2003ல் மனசினக்காரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்தவர் 2004 இறுதியில் ஹரி இயக்கிய ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தபடி தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் தமிழில் ராசியான ஹீரோயினியாக கருதப்பட்ட நயன்தாரா, அதையடுத்து விஜய், அஜித், ரஜினி என மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி முன்னணி நாயகியானார். அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் நயன்தாரா. இப்போதும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார். ஆனால், பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கிற கூட்டம் தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது நயன்தாராவுக்கு எப்போதுமே பிடித்தில்லையாம்.