பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திற்கு பிறகு நகுல் நடித்துள்ள படம் நாரதன். அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. நகுல் ஜோடியாக நிகிஷா படேல், ஸ்ருதிராமகிருஷ்ணன் நடிக்கிக்கிறார்கள். பிரேம்ஜி நாரதன் கேரக்டரில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, மயில்சாமி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாண்டு, கும்கி அஸ்வின் என ஒரு காமெடி பட்டாளம் நடித்திருக்கிறது.
"ஒரு பெண்ணை காப்பாற்றபோய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நகுல், தன் தாய்மாமன் பிரேம்ஜியை தேடி வருகிறார். அவர் இருவரையும் பிரித்தால் தான் பிரச்னை தீர்க்க முடியும் என்று கருதி பிரிக்க நினைக்கிறார். அவர் போடும் திட்டங்கள் இருவரின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது. இன்னொரு பெண்ணை விட்டு காதலிக்க வைக்கிறார். இப்படி பல நாரதர் வேலை பார்க்கிறார். ஆனால் எல்லாமே நன்மையில்தான் முடிகிறது. இப்படியொரு கலகலக காமெடி படம். ஒரு காமெடி பட்டாளத்தையே களம் இறக்கி நடிக்க வைத்திருக்கிறோம். படத்தின் ஆரம்பத்தில் வரும் ரெயில் குத்துபாட்டும், இறுதியில் வரும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும், அந்தமானில் படமாக்கப்பட்டுள்ள பாடல் காட்சிகளும் ரசிகர்களை கவரும்" என்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ்.