ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கொம்பன்' திரைப்படம் வெளியானால் அது சாதிய மோதல்களுக்கு வழி வகுக்கும், படத்தில் சாதி அடிப்படையிலான காட்சிகள் இருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்கு 'கொம்பன்' படம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தில் எந்த இடத்திலும் சாதியைப் பற்றிய ஆதரவுக் கருத்துக்களோ, எதிர்ப்புக் கருத்துக்களோ படத்தில் எந்த ஒரு காட்சியிலும் இடம் பெறவில்லை. மாறாக, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான ராஜ்கிரண், “சாதின்னு வந்தால் பின்னாடியே சண்டைன்னு வரும்'' என்று எந்த சாதியுமே வேண்டாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற அர்த்தத்தில் சொல்லும் ஒரு உயர்வான வசனம் கொண்ட காட்சிதான் இடம் பெற்றுள்ளது.
படத்தில் அரச நாடு, செம்மை நாடு, வெள்ள நாடு என்று மூன்று கிராமத்து மக்களின் வாழ்வியலைப் பற்றிய படமாகத்தான், அதிலும் மாமனார், மருமகன் இடையிலான பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகத்தான் இந்தப் படம் இருக்கிறது. யார் எந்த சாதி என்று எந்தக் காட்சியிலும் யாரும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
படத்தைப் பார்க்காமலேயே இனி எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் படத்தைப் பற்றி தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது. அதையே சமூக வலைத்தளங்களில் கூட திரைப்பட ரசிகர்களும் எதிரொலித்து வருகிறார்கள்.