ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் இவரது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் நன்கு பதிய வைத்தது. தற்போது இந்தியில் கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள பிஸியான ஹீரோயின் தான் ராதிகா ஆப்தே. மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து சமீபத்தில் வெளியான 'ஹரம்' படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ராம்கோபால் வர்மாவின் 'ரத்த சரித்திரம்' மூலம் தெலுங்கில் நுழைந்த ராதிகா ஆப்தே, அடுத்து நடித்தது பாலகிருஷ்ணாவின் 'லெஜன்ட்'.. மீண்டும் தெலுங்கில் நடித்துக்கொண்டிருப்பதும் பாலகிருஷ்ணாவின் 'லயன்' படத்தின் மூலமாகத்தான். ஆனால் தெலுங்கு திரையுலகம் நடிகைகளுக்கு மரியாதையை தரவில்லை என கொந்தளிக்கிறார் ராதிகா..